×

தீபிகாவை காப்பியடிக்கும் பிரியங்கா: திருமணத்தில் புகைப்படம் எடுக்க தடை?

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணத்தில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை காதல் திருமணம் செய்யவிருக்கிறார். தன்னைவிட 10 வயது குறைந்த காதலரை வரும் டிசம்பர் 2ம் தேதி ஜோத்பூரில் உள்ள கலைநயமிக்க ’உமைத் பவன்’ அரண்மனையில் திருமணம் செய்து கொள்கிறார். இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெறவுள்ள திருமணத்திற்காக மும்பையில் இருந்து மணமகனும்,
 

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணத்தில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை காதல் திருமணம் செய்யவிருக்கிறார். தன்னைவிட 10 வயது குறைந்த காதலரை வரும் டிசம்பர் 2ம் தேதி ஜோத்பூரில் உள்ள கலைநயமிக்க ’உமைத் பவன்’ அரண்மனையில் திருமணம் செய்து கொள்கிறார்.

இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெறவுள்ள திருமணத்திற்காக மும்பையில் இருந்து மணமகனும், மணமகளும் இன்று தனி விமானம் மூலம் ஜோத்பூர் சென்றனர். இதைத் தொடர்ந்து உமைத்பவன் அரண்மனையில் மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

சமீபத்தில் இத்தாலியில் நடந்த ரன்வீர் சிங்-தீபிகா படுகோன் திருமணத்தில் விருந்தினர்கள் மொபைல் போன் பயன்படுத்தவும், புகைப்படங்கள் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகே அவர்களது திருமண புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகின.

தற்போது அதே பாணியை கடைப்பிடிக்கும் பிரியங்கா-நிக் ஜோனஸ் ஜோடியும், திருமண புகைப்படங்கள் லீக்காகமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களது திருமண புகைப்படங்களுக்கான உரிமை பல கோடி ரூபாய்க்கு சர்வதேச நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.