×

‘கயல்’ ஆனந்திக்கு திடீர் திருமணம்… உறவினர்கள் மட்டும் அழைப்பு…

சின்ன உருவம்… மின்னல் கண்கள்… ஆனந்தியின் ஸ்பெஷல். 2014 ஆம் ஆண்டு தமிழில் வெளியான பொறியாளன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆனந்தி. இதைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் நடித்தார். கயல் படம் பெரிதாக வெற்றிப்பெற்றது. இந்த படத்தில் வரும் கயல் கேரக்டர் பெரிதும் பாராட்டப்பட்டது. இதனால் இவர் ‘கயல்’ ஆனந்தி ஆனார். பின்னர், திரிஷா இல்லைனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, சண்டிவீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் என வித்தியாசமான
 

சின்ன உருவம்… மின்னல் கண்கள்… ஆனந்தியின் ஸ்பெஷல். 2014 ஆம் ஆண்டு தமிழில் வெளியான பொறியாளன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆனந்தி. இதைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் நடித்தார். கயல் படம் பெரிதாக வெற்றிப்பெற்றது. இந்த படத்தில் வரும் கயல் கேரக்டர் பெரிதும் பாராட்டப்பட்டது. இதனால் இவர் ‘கயல்’ ஆனந்தி ஆனார். பின்னர், திரிஷா இல்லைனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, சண்டிவீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். 

குறுகிய காலத்தில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவர், கவர்ச்சி காட்டும் படங்களில் நடிப்பதில்லை. தற்போது டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், ஏஞ்சல், அலாவுதீனின் அற்புத கேமரா, ராவணக் கூட்டம், கமலி ஃப்ரம் நடுக்காவேரி, தெலுங்கில், ஜாம்பி ரெட்டி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும், நடிகை ஆனந்திக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளதாம். இது காதல் திருமணம் அல்ல என்றும் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் திருமணம், இன்று இரவு வாராங்கல்லில் நடக்கிறது. இந்த திருமணத்துக்கு, உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.