×

பிரபல மலையாள நடிகை வீட்டில் பல லட்சம் கொள்ளை... பணத்தை திருடிவிட்டு தலைமறைவான பணியாளர்கள் !

 

சென்னையில் வசித்து வரும் பிரபல மலையாள நடிகை வீட்டில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர்,  ’உத்தம வில்லன்’, ‘என்கிட்ட மோதாதே’, ‘நிமிர்’, ‘மாலை நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தமிழில் பல படங்களை கைவசம் வைத்துள்ள அவர், சென்னையில் வசித்து வருகிறார். அடிக்கடி சொந்த ஊரான கேரளாவிற்கும் சென்று வருகிறார். இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வரும் அவரது வீட்டில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்பிய போது வீட்டில் இருந்த 6 லட்சம் ரொக்கம் மற்றும் 50 ஆயிரம் மதிப்புடைய மடிக்கணினி, 3 லட்சம் மதிப்பிலான 2 கை கடிகாரங்கள், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளளது. அதோடு வீட்டில் பணிபுரிந்த பணியாளர்களும் மாயமாகியுள்ளனர். இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை பார்வதி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார் சென்னையின் முக்கிய பகுதியில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.