×

மிரட்ட வரும் ‘ரத்த சாட்சி’.. ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி !

 

ஜெயமோகன் எழுதிய ‘ரத்த சாட்சி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

பிரபல தமிழ் எழுத்தாளரான ஜெயமோகன் எழுதிய ‘கைதிகள்’ சிறுகதையை வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்த சாட்சி’. இந்த சிறுகதையின் உரிமையை கைப்பற்றிய ரஃபீக் இஸ்மாயில் தற்போது படத்தையும் இயக்கி முடித்துள்ளார். 

இந்த படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஆஹா தமிழ் ஓடிடியுடன் இணைந்து மகிழ் மன்றம் தயாரித்துள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

விரைவில் ஆஹா தமிழ் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ள இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். அதில் யானை மீது கதாநாயகன் கெத்தாக வரும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.