×

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’.. புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு !

 

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ படம் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. 

மோகன் ஹப்பு எழுதிய கன்னட நாடகத்தை அடிப்படையாக கொண்டு கன்னடத்தில் உருவான திரைப்படம் ‘கரால ராத்திரி’. 1981-களில் நடக்கும் க்ளாஸிக் க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தை கொண்ட இப்படத்தை தயாள் பத்மநாபன் இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி நான்கு மாநில விருதுகளை பெற்றது. 

தமிழகத்தை இப்படத்தின் இயக்குனரான தயாள் பத்மநாபனே, தற்போது இப்படத்தை தமிழில் ‘கொன்றால் பாவம்’ என்ற தலைப்பில் உருவாக்கவுள்ளார். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் வரலட்சுமி மற்றும் சந்தோஷ் பிரதாப் இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இந்நிலையில் இன்ஃபேக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து இப்படத்தின் தொடங்கவிழா பூஜையுடன் இன்று தொடங்கியது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 1-ஆம் தேதி ஐதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்கவுள்ளது.