×

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தில் எதிர்பாராத மாற்றம் !

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது நடிகர் சூரியை வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படம் எழுத்தாளர் ஜெகன்மோகனின் ”துணைவன்” என்கிற சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார். நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவிருந்த வெற்றிமாறன், திடீரென அப்படத்தை அப்படியே விட்டுவிட்டு சூரியை வைத்து இயக்கும் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இளையராஜா இசையமைக்க உள்ள இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள்
 

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது நடிகர் சூரியை வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படம் எழுத்தாளர் ஜெகன்மோகனின் ”துணைவன்” என்கிற சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார். நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவிருந்த வெற்றிமாறன், திடீரென அப்படத்தை அப்படியே விட்டுவிட்டு சூரியை வைத்து இயக்கும் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

இளையராஜா இசையமைக்க உள்ள இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் சத்யமங்கலம் வனப்பகுதியில் படமாக்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் அங்கு தற்போது கடும் குளிர் நிலவுவதால் , பாரதிராஜா தனது உடல்நிலையை கருத்தில்கொண்டு படத்திலிருந்து விலகியுள்ளார்.

இதனால் பாரதிராஜாவுக்கு பதிலாக இயக்குனர் வெற்றிமாறனின் ஆஸ்தான நடிகரான கிஷோர் அக்கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் கிஷோர் ஏற்கனவே வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை ஆகிய படங்களில் நடித்துள்ளார். அப்படங்கள் அனைத்தும் நடிகர் கிஷோருக்கு ஹிட் வரிசையில் அமைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.