சபரிமலையில் நடிகர் மோகன்லால் சாமி தர்சனம்...!

நடிகர் மோகன்லால் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தார்.
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ திரைப்படம் வரும் மார்ச் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாவது பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ‘எம்புரான்’ படம் வெளியாவதையொட்டி நடிகர் மோகன்லால் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது மம்மூட்டியின் இயற்பெயரான ‘முஹம்மது குட்டி’ என்ற பெயரில் அர்ச்சனை செய்தார். தொடர்ந்து தனது மனைவியின் பெயரிலும் அர்ச்சனை மேற்கொண்டார். நடிகர் மம்மூட்டிக்கு உடல்நிலை சரியில்லை என வதந்தி பரவிய நிலையில், மம்மூட்டி நலமுடன் வாழ, அவரது நண்பர் மோகன்லால் சிறப்பு அர்ச்சனை செய்திருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.