×

இதனால் தான் நான் ஓட்டு போடல… பார்த்திபன் சொன்ன காரணம்!

நடிகர் பார்த்திபன் தான் ஏன் வாக்களிக்கவில்லை என்பதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். நேற்று தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மக்கள் தவிர, திரைத்துறை பிரபலங்கள் பலரும் காலை முதல் ஆர்வமாக வாக்களித்தனர். இதற்கிடையில் சில திரைத்துறை பிரபலங்கள் வாக்களிக்கவில்லை. அதில் நடிகர் பார்த்திபனும் ஒருவர். தேர்தல் நாளுக்கு முன்னர் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறித்தியவர், அவரே வாக்களிக்கவில்லை என்பதால் பலரும் இதுகுறித்து பார்த்திபனிடம் கேள்வி எழுப்பினர். அதையடுத்து தான் ஏன் வாக்களிக்கவில்லை
 

நடிகர் பார்த்திபன் தான் ஏன் வாக்களிக்கவில்லை என்பதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நேற்று தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மக்கள் தவிர, திரைத்துறை பிரபலங்கள் பலரும் காலை முதல் ஆர்வமாக வாக்களித்தனர். இதற்கிடையில் சில திரைத்துறை பிரபலங்கள் வாக்களிக்கவில்லை. அதில் நடிகர் பார்த்திபனும் ஒருவர்.

தேர்தல் நாளுக்கு முன்னர் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறித்தியவர், அவரே வாக்களிக்கவில்லை என்பதால் பலரும் இதுகுறித்து பார்த்திபனிடம் கேள்வி எழுப்பினர்.

அதையடுத்து தான் ஏன் வாக்களிக்கவில்லை என்பதற்கான விளக்கத்தை பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

“வணக்கமும் நன்றியும்!ஜனநாயக கடமையை சீராக செய்த
சிறப்பானவர்களுக்கு!
வருத்தமும்,இயலாமையும்.
இரண்டாம் தவனை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது டாக்டருக்குக் போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன் எனவே.

தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions. அதுவும் எனக்கு ஏற்கனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது.என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில்…” என்று தெரிவித்துள்ளார்.