×

எப்போது தொடங்குகிறது ‘ரஜினி 170’ ?... அட்டகாசமான அப்டேட் !

 

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் பட்டையை கிளப்பி வரும் நிலையில் அடுத்த படத்திற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.  அடுத்த படம் எப்படி இருக்கப்போகிறது என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதனால் அந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் உன்னிப்பாக பார்த்து வருகின்றனர். 

ரஜினியின் 170வது படமாக உருவாகும் அந்த படத்தை 'ஜெய் பீம்' இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கவுள்ளார். அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள அந்த படத்தை லைக்கா நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. அந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர்கள் நானி, பகத் பாசில், சர்வானந்த், நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். ‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கு அனிரூத் தான் இசையமைக்கவுள்ளார். 

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் காவல்துறை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.  போலி என்கவுண்ட்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாக ரஜினி நடிக்கிறார். 

தற்போது நடிகர், நடிகைகளை இறுதி செய்யும் பணியில் டிஜே ஞானவேல் ராஜா ஈடுபட்டுள்ளார். அதேநேரம் இந்த படத்திற்காக சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோ ஒன்றில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இப்படத்திற்கான பூஜை நடைபெறவுள்ளது. இதையடுத்து செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் படப்பிடிப்பு தொடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.