×

வீட்டில் கிளி வளர்த்த நடிகர் ரோபோ சங்கர்... பறிமுதல் செய்து வனத்துறை விசாரணை !

 

பிரபல நடிகர் ரோபோ சங்கர், வீட்டில் கிளி வளர்த்தால் அதை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கலக்கப்போவது நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ரோபா சங்கர். மிமிக்ரி மற்றும் ஸ்டாண்ட் அப் காமெடியால் பிரபலமான அவர், தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். காமெடி மற்றும் குண சித்திர வேடங்களில் நடித்து வரும் அவரின் நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டை பெற்று வருகிறது. விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார். 

நடிகர் ரோபோ சங்கர், தற்போது சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், தனது வீட்டில் பல்வேறு வகையான செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார். அந்த வகையில் அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளை வளர்த்து வருகிறார். இது குறித்து வீடியோ ஒன்றும் யூடியூப்பில் வெளியானது. 

இந்நிலையில் அலெக்சாண்டரியன் கிளி வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். அதனால் ரோபோ சங்கர் வீட்டிற்கு சென்ற வனத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அலெக்சாண்டரியன் கிளி வளர்ப்பதை அறிந்து அதை பறிமுதல் செய்து கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ரோபோ சங்கரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.