×

மீண்டும் ஜோடிசேரும் சிம்பு நயன்தாரா ஜோடி..! லைக்ஸ் சும்மா பிச்சிக்கும் போலயே ..!

தற்போது ஈஸ்வரன் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் நடிகர் சிம்பு, வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் ”மாநாடு” படப்பிடிப்பு, அதன் பிறகு கௌதம் கார்த்திக் உடன் இணைந்து நடிக்க இருக்கும் ”பத்து தல” திரைப்படம் என பயங்கர பிஸியாக உள்ளார். அவற்றைத் தொடர்ந்து இயக்குனர் ராம் இயக்கவிருக்கும் ஒரு படத்திலும் நடிகர் சிம்பு நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 2006 ஆம் ஆண்டு வெளியான ”வல்லவன்” திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் சிம்புவின் ஜோடி
 

தற்போது ஈஸ்வரன் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் நடிகர் சிம்பு, வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் ”மாநாடு” படப்பிடிப்பு, அதன் பிறகு கௌதம் கார்த்திக் உடன் இணைந்து நடிக்க இருக்கும் ”பத்து தல” திரைப்படம் என பயங்கர பிஸியாக உள்ளார்.

அவற்றைத் தொடர்ந்து இயக்குனர் ராம் இயக்கவிருக்கும் ஒரு படத்திலும் நடிகர் சிம்பு நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே 2006 ஆம் ஆண்டு வெளியான ”வல்லவன்” திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் சிம்புவின் ஜோடி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. நடிகர் சிம்பு மற்றும் நயன்தாரா காதலில் விழுந்து ஏகப்பட்ட கிசுகிசுக்களுக்கு ஆளாகியதும் அந்த சமயத்தில் தான். ஆனால் அதற்குப் பிறகும் அவர்கள் ”இது நம்ம ஆளு” என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதிய ஒரு படத்திற்கு இவர்கள் மீண்டும் இணைவார்களா அல்லது நயன்தாரா நிராகரித்து விடுவாரா என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால் மீண்டும் இணைந்து நடித்தால் படம் ஓஹோ என ஓடும் என்பதில் சந்தேகமே இல்லை என்றே சொல்லலாம்…

இயக்குனர் ராம் இயக்கவிருக்கும் இந்த புதிய திரைப்படம் ஒரு ரொமாண்டிக் ஸ்டோரியாம். இதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.