×

முதல் நாள் ஷூட்டிகில் விவேக்கிற்கு அஞ்சலி… உதயநிதியின் ‘ஆர்டிகிள் 15’ விறுவிறு…

நடிகர் விவேக் அஞ்சலி செலுத்திய பிறகு தனது படத்தின் ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார் உதயநிதி. கடந்த 2019ம் ஆண்டு பாலிவுட்டில் ஹிட்டடித்த மெகா ஹிட் திரைப்படம் ‘ஆர்டிகிள் 15’. நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் உருவாகிய இப்படம் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை அனுபவ் சின்ஹா இயக்கியிருந்தார். சாதி பாகுபாடுகள் குறித்து கடுமையான சாடிய இப்படம் நாடு முழுவதும்
 

நடிகர் விவேக் அஞ்சலி செலுத்திய பிறகு தனது படத்தின் ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார் உதயநிதி.

கடந்த 2019ம் ஆண்டு பாலிவுட்டில் ஹிட்டடித்த மெகா ஹிட் திரைப்படம் ‘ஆர்டிகிள் 15’. நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் உருவாகிய இப்படம் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை அனுபவ் சின்ஹா இயக்கியிருந்தார்.

சாதி பாகுபாடுகள் குறித்து கடுமையான சாடிய இப்படம் நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படம் பலமொழிகளில் ரீமேக் செய்ய இயக்குனர்கள் முயற்சித்து வருகின்றனர். அந்தவகையில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமையைப் பெற்று தற்போது திரைப்படமாக உருவாகி வருகிறது. இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் இப்படத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்து வருகிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் உதயநிதி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது பொள்ளாச்சி பகுதியில் தொடங்கியுள்ளது. இன்று ஷூட்டிங் தொடங்குவதற்கு மறைந்த நடிகர் விவேக்கிக் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பின் ஷூட்டிங்கை முதல் நாள் ஷூட்டிங் துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது அந்த ஷூட்டிங்கில் அஞ்சலி செலுத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.