×

2 ஆயிரம் நோட்டு வாபஸ்.. பொதுமக்களுக்கு மகிழ்ச்சிதான் - விஜய் ஆண்டனி கருத்து !

 

 2 ஆயிரம் நோட்டு வாபஸ் பெற்றது பொதுமக்களுக்கு மகிழ்ச்சிதான் என்று நடிகர் விஜய் ஆண்டனி கருத்து தெரிவித்துள்ளார். 

பிரபல நடிகராக விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’. நேற்று முன்தினம் திரையரங்கில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் முதலில் நாளில் தமிழில் மட்டும் 3.68 வசூலித்துள்ளது மிகப்பெரிய ஓபனிங்கை கொடுத்துள்ளது. 

இந்த படத்தில் கதாநாயகியாக காவ்யா தாபர் நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, யோகிபாபு, ஒய்.ஜி.மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை அம்பத்தூரில் உள்ள பிரபல திரையரங்கிற்கு சென்ற விஜய் ஆண்டனி, ரசிகர்களுடன் இணைந்து கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடினார். 

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஆண்டனி, ‘பிச்சைக்காரன்’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறினார். மேலும் பேசிய அவரிடம் 2 ஆயிரம் நோட்டு செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பணத்தினை பதுக்கி வைத்திருப்பவர்கள் வறுத்தப்படுகின்றனர். பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.