×

‘குரங்கு பொம்மை’ இயக்குனருடன் கூட்டணி அமைத்த விஜய் சேதுபதி.. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு !

 

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. 

‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். அவர் தற்போது விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நட்டி (எ) நட்ராஜ், முனீஷ்காந்த், அருள்தாஸ், ‘பாய்ஸ்’ மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

முழுக்க முழுக்க க்ரைம் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘காந்தாரா’ படத்தின் இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். 

இந்த படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. முதல் நாள் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி, காட்சிகள் படமாக்கப்பட்டது. விரைவில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.