×

திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் –பளிச் பதில் கொடுத்த நடிகை ‘கௌசல்யா’.

 

90’ஸ் கிட்ஸ்களின் ஆஸ்தான நடிகையாக வலம் வந்தவர் கௌசல்யா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர் தான் ஏன் 40 வயதை கடந்தும் திருமணம் செய்யவில்லை  என்ற உண்மையை கூறியுள்ளார்.

சினிமா மற்றும் சீரியல்களில் கொடி கட்டி பறந்த இவர் சில ஆண்டுகளிலேயே நடிப்பிற்கு குட் பை சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதன் பின் உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போனார். இந்த நிலையில் தான் ஏன் இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் திருமணம் செய்யவில்லை என்ற உணமையை கூறியுள்ளார். அவர் கூறியதாவது “ நான் எனக்கு பிடித்த, பொருத்தமான நபரை இன்னும் என் வாழ்வில் சந்திக்கவில்லை. அதனால் தான் திருமணம் செய்யவில்லை. ஒரு வேளை அப்படி ஒரு நபரை பார்த்திருந்தால் திருமணம் குறித்து யோசித்து இருந்திருந்திருப்பேன். எனது பெற்றோரோடு ஒன்றி வாழ்ந்து பழகிவிட்டேன். அவர்கள் இன்றி நானும், நான் இன்றி அவர்களும் வாழமுடியாது” என பளிச் பதில் கொடுத்துள்ளார் கௌசல்யா.