×

பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்த நந்திதா!

நடிகை நந்திதா ஸ்வேதா பழனி முருகன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து நடிகைகள் பலர் மீண்டும் தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். அதில் ஒன்று கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்வது. பொதுவாக பெரும்பாலான நடிகைகள் திருப்பதி மலையில் நடந்து சென்று தரிசனம் செய்வது தான் அதிகம். தமிழ்நாட்டில் இதற்கு பேமஸ் ஆன கோவில் என்றால் மீனாட்சி அம்மன் கோவில் தான். திரை பிரபலங்கள் பெரும்பாலனோர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்வது
 

நடிகை நந்திதா ஸ்வேதா பழனி முருகன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார்.

ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து நடிகைகள் பலர் மீண்டும் தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். அதில் ஒன்று கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்வது. பொதுவாக பெரும்பாலான நடிகைகள் திருப்பதி மலையில் நடந்து சென்று தரிசனம் செய்வது தான் அதிகம். தமிழ்நாட்டில் இதற்கு பேமஸ் ஆன கோவில் என்றால் மீனாட்சி அம்மன் கோவில் தான். திரை பிரபலங்கள் பெரும்பாலனோர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்வது தான் வழக்கம். சமீபத்தில் சிம்பு கூட மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தார்.

தற்போது நடிகை நந்திதா பழனி கோவிலுக்குச் சென்றுள்ளார். அருகினில் படப்பிடிப்பு நடைபெறுவதால் இங்கு ஒரு விசிட் அடித்தாரா? இல்லை பழனி முருகனை பார்த்து ஆசி வாங்கிச் செல்ல வந்தாரா என்பது புலப்படவில்லை.

அட்டகத்தி படத்தின் வாயிலாக இளைஞர்கள் மனதில் பாய்ந்த நந்திதா பின்னர் தமிழில் பிரபல நடிகையானார். கடைசியாக சிபிராஜ் உடன் கபடதாரி படத்தில் நடித்துள்ளார்.