×

சூப்பர் அம்மாவாக மாறிய நயன்தாரா.. அன்னையர் தினத்தில் உயிர், உலக்குடன் !

 

அன்னையர் தினத்தில் தனது குழந்தைகளுடன் நடிகை நயன்தாரா இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

கடந்த 20 ஆண்டுகளாக தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் நடிகை நயன்தாரா. கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த அவர், கடந்த ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். அதன்பிறகு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை  பெற்றுக்கொண்டனர். 

தனது குழந்தைக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்விக் என் சிவன் என்று பெயர் வைத்தனர். குழந்தை பெற்றப்பிறகும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.  நடிகையாக இருப்பதற்கு திருமணம் மற்றும் குழந்தைகள் தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கிறார். தனது மகன்களை கவனித்துக் கொண்டு சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார். நயன்தாராவின் வாழ்க்கை பிற நடிகைகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. சாதனை செய்வதற்கு எந்த விஷயமும் தடை இல்லை என்பது உலகிற்கு காட்டியுள்ளார். 

இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தனது இரு மகன்கள் மீது அளவு கடந்த பாசத்தை வைத்துள்ள அவர், அழகான இருவரையும் கொஞ்சும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.