×

“அதுக்கு சுய இன்பம் செய்வது எவ்ளவோ மேல்”… ரசிகரின் கேள்விக்கு ‘நச்’சுனு பதிலளித்த ஓவியா!

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்று கமல்ஹாசன் அடிக்கடி பேசிய விளம்பரம் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. அது என்ன நிகழ்ச்சியாக இருக்கும் என்று தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 15 பிரபலங்களை 100 நாட்கள் ஒரு வீட்டில் அடைத்து வைத்து அவர்களில் யார் 100 நாட்கள் இருந்து வெற்றி பெறுகிறார் என்பது தான் அந்த விளையாட்டு என்று அறிமுகப்படுத்தினார்கள். தமிழகத்தில் புதிதாக அறிமுகமான ரியாலிட்டி ஷோ போகப்போக மிக பிரபலமானது. பிக்பாஸ் முதல் சீசன் என்றாலே
 

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்று கமல்ஹாசன் அடிக்கடி பேசிய விளம்பரம் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. அது என்ன நிகழ்ச்சியாக இருக்கும் என்று தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 15 பிரபலங்களை 100 நாட்கள் ஒரு வீட்டில் அடைத்து வைத்து அவர்களில் யார் 100 நாட்கள் இருந்து வெற்றி பெறுகிறார் என்பது தான் அந்த விளையாட்டு என்று அறிமுகப்படுத்தினார்கள். தமிழகத்தில் புதிதாக அறிமுகமான ரியாலிட்டி ஷோ போகப்போக மிக பிரபலமானது.

பிக்பாஸ் முதல் சீசன் என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது ஓவியாதான். ஓவியா மீது அதிக பற்று கொண்ட ரசிகர்கள் ஓவியா ஆர்மி என்று தனியே ஒரு ஆர்மிவையே உருவாக்கினார்கள். அந்தளவுக்கு ஓவியா மீது ரசிகர்கள் அன்பு செலுத்தினர். பட வாய்ப்புகள் இல்லாமல் முடங்கியிருந்த ஓவியாவுக்கு பிக்பாஸ் பட வாய்ப்புகளைக் குவியச் செய்தது.

தற்போது ஓவியா தனது ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடல் நடத்தினார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் சுவாரஸ்யமாக பதில் அளித்து வந்தார். நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண் வன்முறைகளைப் பற்றி பேசிய அதிக கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஒரு பயனர் “ஒருவர் பெண்களின் வாழ்க்கையை சீரழிப்பதை விட சுய இன்பத்தில் ஈடுபடுதே மேல். நான் சொல்வது சரிதானே மேடம்? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த ஓவியா “அதுதான் உங்களுக்கு நல்லது”உண்மை தான்” என்று பதிலளித்திருந்தார். இந்த பதிவு பலரால் ரீட்வீட் செய்யப்பட்டு வருகிறது.