×

பாத்டப்பில் போட்டோஷூட்.. வைரலாகும் மலையாள நடிகையின் புகைப்படங்கள் !

 

மலையாள நடிகை பார்வதி நாயர் பாத்டப்பில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அசர வைத்துள்ளார். 

 தமிழில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை தன்வசம் படுத்தியவர் நடிகை பார்வதி நாயர். கடந்த 2105ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் வில்லனுக்கு இணையாக பேசப்பட்டது. அஜித்துடன் பார்வதி நாயர் மோதும் காட்சிகள் இன்றைக்கும் ரசிக்கப்படுகிறது. 

இந்த படத்திற்கு உத்தமவில்லன், மாலைநேரத்து‌ மயக்கம், வாஸ்கோடகாமா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக மாறிவிட்ட அவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் மரைச்செல்வன் இயக்கத்தில் 'ரூபம்' என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளள்ளார்.

இந்நிலையில் பாத்டப்பில் இருக்கும் புகைப்படங்களை பார்வதி நாயர் வெளியிட்டுள்ளார். வெள்ளை உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.