×

நாடாளுமன்றம் சென்ற நடிகை 'தமன்னா'- வெடித்த சர்ச்சை.

 

நடிகை தமன்னா நாடாளுமன்ற சென்ற நிலையில் இது தொடர்பான புகைப்படம் வீடியோ வெளியாகி இணையத்தில் அனல்பறக்கும் வேள்விகள், விவாதங்கள் என சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

புதிய நாடாளுமன்றம் திறக்க பட்ட நிலையில், அதில் முதலாவதாக பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பதால் இந்திய நடிகைகள் பலர் சிறப்பு அழப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். அதில் கங்கனா ரனாவத், ஈஷ குப்தா ஆகியோர் முதல் நாளே அழைக்கப்பட்ட நிலையில் நடிகை தம்ன்னாவுக்கும் அழைப்பு போயுள்ளது.

அதனை ஏற்று நடிகை தமன்னா புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு சென்ற நிலையில் அவரிடன் செய்தியாளர்கள் பேட்டி எடுத்துள்ளனர். அதில் அவர் கூறியதாவது “ மகளிருக்கான இட ஒதுக்கீடு ஒரு நல்ல முயற்சி, இதனால் சமானியர்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர தூண்டுகிறது” என கூறியுள்ளார்.

மேலும் தமன்னா, திவயானந்தா, ஷெஹானாஸ், குஷ்பு ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் குடியரசு தலைவரே அழைக்கப்படாத நிலையில் நடிகைளை அழைத்தது ஏன் என விவாதத்தை கிளப்பியுள்ளனர்.