×

வெயிலுக்கு இதமாய் அருவிக்கு சென்ற யாஷிகா.. லைக்குகளை குவிக்கும் புகைப்படங்கள் !

 

 வெயிலுக்கு இதமாய் அருவிக்கு ஒன்றிக்கு நடிகை யாஷிகா ஆனந்த் சென்றுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் யாஷிகா ஆனந்த், டெல்லியை சேர்ந்த மாடல் அழகியாவார். தனது கவர்ச்சியான நடிப்பால் இன்றைய இளைஞர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். ஆரம்பத்தில் ‘துருவங்கள் 16’,  ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘நோட்டா’, ‘ஜாம்பி’ உள்ளிட்ட சில படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 

அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்களில் ஒப்பந்தமாகி கதாநாயகியாக நடித்து வந்தார். இதற்கிடையே கடந்த 2021-ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்தார். இதனால் சில மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த அவர், வீட்டிலே ஓய்வெடுத்து வந்தார். தற்போது பழைய நிலைமைக்கு திரும்பியுள்ள அவர், புதிய படங்களில் நடித்து வருகிறார். 

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் வெயிலுக்கு இதமாக அருவி ஒன்றிற்கு சென்றுள்ள அவர் குளியலுக்கு முன்னர் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இணையத்தில் தீயாய் பரவி வரும் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றன.