×

பார்பி கேளாக மாறிய நடிகை யாஷிகா.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் !

 

பார்பி கேள் போன்று உடையணிந்து இருக்கும் புகைப்படங்களை நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ளார். 

விதவிதமான போட்டோஷூட்களை வெளியிட்டு இளசுகளின் மனதை பஞ்சராக்கி வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த். கடந்த 2016-ஆம் ஜீவா, காஜல் அகர்வால் இணைந்து நடித்த ‘கவலை வேண்டாம்’ படத்தில் நீச்சல் குள பயிற்சியாளர் கேரக்டரில் நடித்து முதல்முதலில் நடிகையாக அறிகமானார். அதன்பிறகு ‘துருவங்கள் பதினாறு’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’ உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

பல படங்களில் நடித்தாலும் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் மூலமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அவரின் கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2-ல் கலந்துக்கொண்ட அவர், நிகழ்ச்சியின் இறுதியில் மிகப்பெரிய அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 

சினிமாவில் 17 வயதிலேயே நடிக்க ஆரம்பித்துவிட்ட அவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக பாலோவர்களை வைத்துள்ளார். இதனால் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அதிக லைக்குகளை குவித்து வருகிறது. இந்நிலையில் கடற்கரை ஒன்றில் பார்பி கேள் போன்று உடையணிந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குட்டி கவுனில் செம க்யூட்டாக இருக்கும் அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.