×

ஏலே பட ரிலீசுக்கு ஏற்பட்ட சிக்கல்… தியேட்டரில் வெளியாவது சந்தேகம்!?

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏலே’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூவரசம் பீப்பி, சில்லுக்கருப்படி என ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது ஹலிதா மூன்றாவதாக ‘ஏலே’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கே மணிகண்டன் இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏலேய் திரைப்படம் பிப்ரவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது படம் வெளியாவதில் சிக்கல்
 

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏலே’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூவரசம் பீப்பி, சில்லுக்கருப்படி என ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது ஹலிதா மூன்றாவதாக ‘ஏலே’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கே மணிகண்டன் இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏலேய் திரைப்படம் பிப்ரவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான இரண்டே வாரங்களில் ஓடிடி தளத்தில் வெளியானது தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதனால், இனி வரும் நாட்களில் சிறிய படங்கள் 30 நாட்கள் வரையும் பெரிய படங்கள் 50 நாட்கள் கழித்து தான் டிஜிட்டல் தளங்களில் வெளியிடுவோம் என்று உறுதிமொழிக் கடிதம் கொடுக்க வேண்டுமென்றும் அப்படிக் கொடுத்தால்தான் படங்கள் திரையிடப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஆனாலும் அப்படி உறுதிமொழிக் கடிதம் கொடுக்காத படங்களை வெளியிடமாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் விடாப்பிடியாக உள்ளனராம்.

ஏலேய் படக்குழுவினர் இந்த உறுதிமொழிக் கடிதத்தைக் கொடுக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அப்படம் திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ஏலே ஓடிடி தளத்தில் வெளியாக அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.