×

அஜித் பெயரைப் பயன்படுத்தி நடந்துவரும் மோசடிகள்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

நடிகர் அஜித்குமாரின் பெயரைப் பயன்படுத்தி பலர் மோசடி செய்வதாக அவரது சட்ட ஆலோசகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நான் திரு அஜித்குமார் அவர்களின் அதிகாரப் பூர்வ சட்ட ஆலோசகர். இந்த அறிக்கை நாங்கள் எங்கள் கட்சிக்காரர் திரு அஜித் குமார் சார்பாக கொடுக்கும் சட்ட அறிக்கை ஆகும். சமீப காலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் என் கட்சிகாரர் சார்பாகவோ, அல்லது அவரது பிரதிநிதி போலவோ என் கட்சிக்காரர் அனுமதியின்றி
 

நடிகர் அஜித்குமாரின் பெயரைப் பயன்படுத்தி பலர் மோசடி செய்வதாக அவரது சட்ட ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“நான் திரு அஜித்குமார் அவர்களின் அதிகாரப் பூர்வ சட்ட ஆலோசகர். இந்த அறிக்கை நாங்கள் எங்கள் கட்சிக்காரர் திரு அஜித் குமார் சார்பாக கொடுக்கும் சட்ட அறிக்கை ஆகும்.

சமீப காலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் என் கட்சிகாரர் சார்பாகவோ, அல்லது அவரது பிரதிநிதி போலவோ என் கட்சிக்காரர் அனுமதியின்றி தங்களை முன்னிலை படுத்தி வருவதாக சில சம்பவங்கள் என் கட்சிக்காரர் கவனத்துக்கு வந்துள்ளது.

இதை முன்னிட்டு கட்சிக்காரர் தன்னுடன் வருடங்களாக பணியாற்றி வரும் அவரது மேலாளர் திரு சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற தன் பிரதிநிதி என்றும் அவர் மட்டுமே தன்னுடைய சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி என்றும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கிறார்

மேலும் தன்னுடைய பெயரை பயன்படுத்தி எந்த ஒரு தனி நபரோ நிறுவனமோ யாரையேனும் அணுகினால் அந்த தகவலை திரூ. சுரேஷ் சந்திரா அவர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் வேண்டுக்கொள் விடுகிறார். இதை மீறி இத்தகைய நபர்களிடம் தன் சம்மந்தமாக யாரும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியான தொடர்பில் இருந்தால், அதனால் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால் அதற்கு என் கட்சிகாரர் எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை என்று அறிவிப்பதோடு, இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறார். “என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.