×

போர்ச்சிக்கல் நாட்டிற்கு பறந்த அதிதி ஷங்கர்... எதற்காக தெரியுமா ?

 

 நடிகை அதிதி ஷங்கர் படப்பிடிப்பிற்காக போர்ச்சிக்கல் நாட்டிற்கு சென்றுள்ளார். 

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் அதிதி ஷங்கர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அவர், குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமாகிவிட்டார். அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வருகிறது. முதலில் கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். 

அதன்பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாவீரன்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை அதிதி தனது மூன்றாவது படத்தில் நடித்து வருகிறார். பிரபல நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி இந்த படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.  இந்த படத்தை ‌ அஜித்தின் பில்லா, பில்லா 2 உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கிய விஷ்ணு வரதன் இயக்கி வருகிறார்.  ‌

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் தொடங்கியது‌. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு போர்ச்சிக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் நகரில் நடைபெற உள்ளது. இதற்காக நடிகை அதிதி உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று போர்ச்சிக்கல் நாட்டிற்கு சென்றனர். அங்கு முக்கிய காட்சிகளை படமாக்க விஷ்ணு வரதன் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில் , இரண்டாம் கட்ட படப்பிடிப்பு போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் என்ற நகரில் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று அப்படக்குழுவினருடன் அதிதி ஷங்கரும் போர்ச்சுக்கல்லுக்கு பறந்துள்ளார். அங்கு இப்படத்தின் படப்பிடிப்பை ஒரு மாதம் முகாமிட்டு நடத்திவிட்டு அதன் பிறகு சென்னை திரும்ப உள்ளார்கள்.