சிறையிலிருந்து வீடு திரும்பிய அல்லு அர்ஜுனை சந்தித்த சக நடிகர்கள்!
சிறையிலிருந்து திரும்பிய நடிகர் அல்லு அர்ஜுனை நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, நாக சைதன்யா மற்றும் ராணா டகுபதி ஆகியோர் அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தனர்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 5-ந் தேதி 'புஷ்பா 2' திரைப்படம் வெளியானது. இப்படத்தின் சிறப்பு காட்சி ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் 4-ந் தேதி இரவு 10.30 மணியளவில் திரையிடப்பட்டது. அதனை காண அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்பட பலரும் சந்தியா திரையரங்கிற்கு சென்றனர்.அப்போது நடிக அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக அதிக அளவிலான ரசிகர்கள் திரையரங்கில் கூடினர். இதனால், ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலில் சிக்கி குடும்பத்தினருடன் படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண்ணும், அவரது மகன் ஸ்ரீதேஜாவும் (வயது 9) நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது ரசிகர்கள் பலரும் இருவர் மீதும் ஏறி மிதித்தனர். இதனால் இருவரும் மூச்சுபேச்சின்றி சுயநினைவை இழந்தனர்.இதையடுத்து, இருவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறுவன் ஸ்ரீதேஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது தாயாரான ரேவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.