×

”அண்ணாத்த ” படப்பிடிப்புத் தளத்தில் 8 பேருக்கு கொரோனா !?படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் உருவாகி வருகிறது. கொரோனா காலகட்டத்தால் தள்ளிபோடப்பட்ட படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பத்து மாத இடைவெளிக்கு பின்பு கடந்த 13 ஆம் தேதி மீண்டும் தொடங்கியது.இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா ஆகியோர் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்றிருந்தனர். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, பிரகாஷ்ராஜ்
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் உருவாகி வருகிறது.

கொரோனா காலகட்டத்தால் தள்ளிபோடப்பட்ட படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பத்து மாத இடைவெளிக்கு பின்பு கடந்த 13 ஆம் தேதி மீண்டும் தொடங்கியது.இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா ஆகியோர் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்றிருந்தனர்.

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் அச்சுறுத்தலால் இந்த படப்பிடிப்பு குழுவைத் தவிர வெளியாட்கள் யாரும் உள்ளே வராதபடி ”பயோ பபுள்” முறையுடன் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வந்தது.

மேலும் இந்த படப்பிடிப்பை ஜனவரி மாதம் 10ம் தேதிக்குள் வேகமாக முடிக்க வேண்டுமென படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் தற்போது அண்ணாத்த படக்குழுவினர் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அந்த 8 பேர் யார் என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

இதனால் தற்காலிகமாக அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், படக்குழுவினர் இதனால் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பச்செல்ல உள்ளார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.