×

அந்த படத்திற்கு நான் இசையமைக்கவில்லை... அதிரடியாக அறிவித்த ஏ.ஆர்.ரகுமான் !

 

துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்திற்கு நான் இசையமைக்கவில்லை என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விளக்கமளித்துள்ளார். 

பிரபல நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், தமிழ் சினிமாவில் இளம் நாயகனாக வலம் வருகிறார். தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி துருவ்வுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.  

இந்த படத்தையடுத்து தனது தந்தை விக்ரமுடன் இணைந்து ‘மகான்’ படத்தில் நடித்தார்.  அதன்பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருந்தார். முதற்கட்ட பணிகள் நடைபெற்ற வந்த அந்த படத்தில் கபடி வீரராக நடிக்கவிருந்தார். அந்த படத்திற்காக சில பயிற்சிகளையும் துருவ் விக்ரம் மேற்கொண்டு வந்தார். ஆனால் அந்த படம் இன்னும் தொடங்கப்பட வில்லை.

இதையடுத்து சமீபத்தில் ‘டாடா’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த கணேஷ் கே பாபு இயக்கத்தில் துருவ் நடிக்கவிருக்கிறார். லைகா புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த தகவலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மறுத்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள அவர், உண்மையில்லை. தவறான தகவல்களை பகிரவேண்டாம். எனினும் துருவ் விக்ரம் நடிக்கும் இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.