நாகூர் சந்தனகூடு விழா! ஆட்டோவில் வந்து இறங்கிய ‘ஏ.ஆர். ரஹ்மான்’.
Dec 24, 2023, 19:17 IST
நாகூர் தர்காவில் நடக்கும் கந்தூரி விழாவின் ஒரு பகுதியான சந்தனகூடு நிகழ்விற்கு ஆட்டோவில் வந்துள்ளார் ஏ.ஆர் ரஹ்மான்.
புகழ்பெற்ற நாகூர் ஆண்டவரின் 467ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் ஒரு பகுதியாக சந்தனகூடு நேற்று இரவு நடந்துள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இந்த விழாவுக்கு ஆண்டுதோறும் ஏ.ஆர் ரஹ்மான வருகைதருவார். அந்த வகையில் இந்த ஆண்டும் அவர் கலந்துகொண்டார் அதுவும் மிக எளிமையாக ஆட்டோவில் வந்து இறங்கி இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
உலக அளவில் முக்கியமான ஒருவர், ஆஸ்கர் நாயகன் கோடியகளில் சொத்து இருந்தாலும் எளிமையாக ஆட்டோவில் வந்தது அவரது எளிமையை காட்டுவதாக ரசிகர்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.