×

இருள் ஆளப்போகிறது” - ‘டிமான்டி காலனி 2’ படத்தின் முக்கிய அப்டேட் 

 

அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் ‘டிமான்டி காலனி 2’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘டிமான்டி காலனி 2’. கடந்த 2015-ஆம் ஆண்டு இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. வித்தியாசமான ஹாரர் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தின் பணிகள் கடந்தாண்டு தொடங்கியது. 

இரண்டாம் பாகத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இவர்களுடன் ஆன்ட்டி ஜாஸ்கெலைன், டிசேரிங் டோர்ஜோ, அருண் பாண்டியன், முத்துகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனா காலிட், விஜே அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு சி.எஸ்.சாம் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தை அஜய் ஞானமுத்துவின் பட்டரை மற்றும் வெயிட் நைட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.  ஒசூர் பகுதியில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்ததது. இந்நிலையில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு இன்று நிறைவுபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.