×

மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்கப்படும் ‘பார்டர்’...  தொடரும் அருண் விஜய் பட சிக்கல் !

 
 அருண் விஜய்யின் ‘பார்டர்’ திரைப்படம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்‘பார்டர்’.  'குற்றம் 23' படத்துக்கு பிறகு அறிவழகன் - அருண் விஜய் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஸ்டெபி படேல் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகை ரெஜினா கசன்ட்ராவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். முழுக்க ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

நீண்ட நாட்களாக இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்ற வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டும் இன்றுவரை வெளியாகாமல் இருக்கிறது. சமீபத்தில் இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்பட்ட குறிப்பிட்ட தேதியும் படம் வெளியாகாது என்றும், படத்தை தள்ளி வைக்கிறோம் என்றும் பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் வரும் மார்ச் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.