×

'முழு நடிகராகிவிட்டார் செல்வராகவன்' - நடிகர் கார்த்தி பாராட்டு !

 

இயக்குனர் செல்வராகவன் முழு நடிகராகிவிட்டார் என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். 

 பிரபல இயக்குனரான செல்வராகவன், தற்போது நடிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பகாசூரன்’. இந்த படத்தை 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கியுள்ளார்.

இந்த படத்தை மோகன் ஜியின் ஜிஎம் பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளார். இந்த படத்தில் தாராக்ஷி கதாநாயகியாக நடித்துள்ளார்.  இவர்களுடன் ராதாரவி, கே.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி, சசிலையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது.  

இந்நிலையில் பகாசூரனில் செல்வராகவனின் நடிப்பை பார்த்து நடிகர் கார்த்தி பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் செல்வராகவனை பார்க்கவே நல்ல இருக்கிறது. முழுக்க முழுக்க நடிகராகி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே அவர் ஒரு சிறந்த நடிகர் என்று தெரியும். ஆனால் தற்போது உலகத்திற்கே தெரிந்துவிட்டது என்று கூறினார்.