×

நயன்தாராவை விக்னேஷ் சிவனிடமிருந்து பிரித்த சிறுத்தை சிவா !

சிறுத்தை சிவா இயக்கத்தில் ,ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ”அண்ணாத்த” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 13ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது என்பது ரசிகர்கள் பலருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். அண்ணாத்த திரைபடத்தில் நடிகை நயன்தாரா ரஜினியின் மனைவியாகவும், கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு சகோதரியாகவும் நடிக்கின்றனர். இதனால் நயன்தாரா தற்போது ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். அதேசமயம் நயன்தாராவின் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனின் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் படப்பிடிப்பும் தற்போது ஹைதராபாதில் தான்
 

சிறுத்தை சிவா இயக்கத்தில் ,ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ”அண்ணாத்த” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 13ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது என்பது ரசிகர்கள் பலருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான்.

அண்ணாத்த திரைபடத்தில் நடிகை நயன்தாரா ரஜினியின் மனைவியாகவும், கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு சகோதரியாகவும் நடிக்கின்றனர். இதனால் நயன்தாரா தற்போது ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். அதேசமயம் நயன்தாராவின் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனின் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் படப்பிடிப்பும் தற்போது ஹைதராபாதில் தான் நடந்து கொண்டிருக்கிறது.

இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன், நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடிக்கின்றனர். ஆனால் நயன்தாரா தற்போது அண்ணாத்த படப்பிடிப்பில் உள்ளதால் காதலரின் படப்பிடிப்பில் பங்கேற்க முடியவில்லை.

மேலும் அண்ணாத்த படப்பிடிப்பில் ”பையோ பப்பிள்” என்கிற பாதுகாப்பு முறை பின்பற்றப்பட்டு வருவதால் அவர்கள் இருவரும் சந்திக்கக்கூட முடிவதில்லை. ”பையோ பப்பிள்” முறையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பவர்களுடன் வெளியில் இருப்பவர்கள் நேரில் தொடர்புகொள்ள முடியாது. அதுபோல சாப்பாடு உட்பட எந்தவித பொருட்களையும் வெளியிலிருந்து கொண்டு வர முடியாது.

இதனால் ஒரே ஊரில் இருந்தும் தற்போது காதல் பறவைகள் இருவரும் தனித்தனியே வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். மற்ற படங்களுக்கு ஷூட்டிங் வேலையாக போனாலும் விக்னேஷ் சிவனை கூடவே கூப்பிட்டு செல்லும் நயன் தற்போது பிரிந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.