×

நடிகர்கள் சூரி, விமல் மீது வழக்குப்பதிவு…. லாக்டவுனில் இவங்க செஞ்ச வேலைய பாருங்க..!!?

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருந்து வருகின்றனர்.. திரையரங்குகள், கோவில்கள், சுற்றுலாத்தளங்கள் என அனைத்து பொழுதுபோக்கு தளங்களும் மூடியே கிடக்கின்றன. 6 ஆம் கட்ட ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் காரணமாக மக்கள் வெளியில் நடமாடுவதைப் பார்க்க முடிகிறது. இருப்பினும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் திரைப்பிரபலங்கள் வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.. இந்நிலையில் பிரபல சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தடை உத்தரவை மீறி நடிகர்கள் சூரி, விமல் உள்ளிட்ட 4 பிரபலங்கள் வந்ததாக புகார் எழுந்துள்ளது.
 

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருந்து வருகின்றனர்.. திரையரங்குகள், கோவில்கள், சுற்றுலாத்தளங்கள் என அனைத்து பொழுதுபோக்கு தளங்களும்  மூடியே கிடக்கின்றன. 6 ஆம் கட்ட ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் காரணமாக மக்கள் வெளியில் நடமாடுவதைப் பார்க்க முடிகிறது. இருப்பினும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் திரைப்பிரபலங்கள் வீட்டிலேயே இருந்து வருகின்றனர்..

இந்நிலையில் பிரபல சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தடை உத்தரவை மீறி நடிகர்கள் சூரி, விமல் உள்ளிட்ட 4  பிரபலங்கள் வந்ததாக புகார் எழுந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொடைக்கானல் வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் நடிகர்கள் சூரி, விமல் உள்ளிட்ட திரைப்பலங்கள் கொடைக்கானல் பேரிஜம் ஏரிப்பகுதியில் மீன்பிடித்தது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


இவைகள் பழைய புகைப்படங்களா அல்லது தடையை மீறி அவர்கள் வந்தார்களா என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.  தொடர்ந்து அவர்கள் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்..