×

நடிகர் பாபி சிம்ஹா மீது மான நஷ்ட வழக்கு

 

நடிகர் பாபி சிம்ஹா தமிழில் தனக்கான இடத்தைப் பிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். ‘ஜிகர்தண்டா’ படத்தின் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்ற அவர் ‘உறுமீன்’, ‘திருட்டுப்பயலே’ உள்ளிட்ட படங்களில் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கார்த்திக் சுப்புராஜின் பேவரைட் நடிகர்களில் பாபி சிம்ஹா முக்கியமானவர். எனவே தனது அனைத்து படங்களிலும் அவருக்கு ஒரு சான்ஸ் கொடுத்துவிடுவார்.

கொடைக்கானலில் அனுமதியின்றி பங்களா கட்டியது தொடர்பாக நடிகர் பாபி சிம்ஹா மீது ஏற்கனவே பல வழக்குகள் போடப்பட்டன. தற்போது பாபி சிம்ஹாவின் நண்பர் ஒருவரும் கூட மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.