×

மாரி செல்வராஜூடன் கைகோர்க்கும் தனுஷ்... மீண்டும் இணையும் ப்ளாக் பஸ்டர் கூட்டணி !

 

மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தன்னுடைய வித்தியாசமான திரைக்கதை மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் மாரி செல்வராஜ். சாதிய மோதல் தலைவிரித்தாடும் சூழ்நிலையில் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தை எடுத்து தன்னுடைய முதல் படத்திலேயே அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். இந்த படத்தையடுத்து தனுஷை வைத்து ‘கர்ணன்’ படத்தை இயக்கினார். இந்த படமும் நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்த இரண்டு படங்களுக்கு பிறகு உதயநிதியை வைத்து ‘மாமன்னன்’ படத்தை எடுத்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 'வாழை' என்ற சிறிய பட்ஜெட் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் தனுஷை வைத்து மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். 

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருக்கிறது. தற்போது இந்த படத்தின் கதையை தனுஷிடம் கூறிவிட்ட நிலையில் முதற்கட்ட பணிகளை தனுஷ் செய்து வருகிறார். இதற்கிடையே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வரும் தனுஷ், விரைவில் தனது 50வது படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். அதன்பிறகு மாரி செல்வராஜுடன் இணைவார் என்று கூறப்படுகிறது.