×

‘வாத்தி’ செகண்ட் சிங்கிள் ஆன் தி வே.. ஜி.வி.பிரகாஷ் கொடுத்த சூப்பர் அப்டேட் !

 

 தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள செகண்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. இந்த படத்தை தோழி பிரேமா', முதல் முறையாக இந்த படத்தின் மூலம் நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

'மிஸ்டர் மஜ்னு' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இந்த படத்தில் சாய் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் வெளியாகும் என்றும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.