×

பெருமாள் கோவில் தேரை இழுத்த  ஏ ஆர்! வைரலாகும் புகைப்படம்..

 

சொந்த ஊரில் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்த ஏ ஆர் முருகதாஸ்.

தீனா படத்தை இயக்கி மாஸ் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு  என்ட்ரி கொடுத்தார் .ஆர் முருகதாஸ். தொடர்ந்து ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, ஸ்பைடர், சர்க்கார், தர்பார் என வெற்றிப்படங்களை கொடுத்தார்.

இந்த நிலையில் தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்றுவரும்  திருபவித்ரோத்ஸவம் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளார்.குறிப்பாக திருத்தேர் திருவிழாவில், கலந்து கொண்ட இயக்குநர்  தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்துள்ளார்.

கோவிலில் மிக எளிமையாக தனது குடும்பத்துடன் அமர்ந்து இறைவனை மனமுறுகி வேண்டும்  புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.