×

அட்லீ படத்தில் நடிக்கும் புது வில்லன் - 800கோடி பட்ஜெட்டில் உருவாகிறது .

 

அட்லீ,ஒரு திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார், . இவர் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த பின், 2013-ஆம் ஆண்டு "ராஜா ராணி" திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்திற்காக, சிறந்த அறிமுக இயக்குனருக்கான விஜய் விருது மற்றும் சிறந்த உரையாடலாசிரியருக்கான தமிழ்நாடு மாநில விருது பெற்றார். பின்னர், விஜய் நடித்துள்ள தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணியில் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட திரைப்படம், பான் இந்திய அளவில் உருவாகும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாகும் 
தீபிகா படுகோனே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தாலும், மீதமுள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகாமல் இருக்கிறது 
இந்நிலையில், இப்படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தும் வகையில், ஹாலிவுட் நட்சத்திரம் வில் ஸ்மித்திடம் ''வில்லன்'' கதாபாத்திரத்திற்காக படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது
மேலும், இந்த கதாபாத்திரத்திற்காக டுவைன் ஜான்சனையும் பரிசீலித்து வருவதாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் ரூ.800கோடி  பட்ஜெட்டில் உருவாவதாக கூறப்படுகிறது.