×

பள்ளி நபர்களுடன் இணைந்து புதிய தயாரிப்பு நிறுவனம் துவங்கிய வசந்தபாலன்!

இயக்குனர் வசந்தபாலன் தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளார். இயக்குனர் வசந்தபாலன் தமிழின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர். இவர் எடுக்கும் படங்கள் யாவும் கதை மாந்தர்களின் மண்ணியல் சார்ந்த உணர்வுகளை அப்படியே பார்வையாளர்களுக்கு கடத்துபவை. சாமானிய மக்களின் வாழ்வை நாம் அருகிலிருந்து பார்த்தது போல ஒரு உணர்வை இவரது படங்கள் நமக்குக் கொடுக்கும். வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் என இவரது படங்கள் மக்கள் மனதில் நிலையாக இடம் பெற்றவை. தற்போது
 

இயக்குனர் வசந்தபாலன் தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளார்.

இயக்குனர் வசந்தபாலன் தமிழின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர். இவர் எடுக்கும் படங்கள் யாவும் கதை மாந்தர்களின் மண்ணியல் சார்ந்த உணர்வுகளை அப்படியே பார்வையாளர்களுக்கு கடத்துபவை. சாமானிய மக்களின் வாழ்வை நாம் அருகிலிருந்து பார்த்தது போல ஒரு உணர்வை இவரது படங்கள் நமக்குக் கொடுக்கும். வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் என இவரது படங்கள் மக்கள் மனதில் நிலையாக இடம் பெற்றவை.

தற்போது வசந்தபாலன் சினிமாவில் அடுத்த படிக்குச் சென்றுள்ளார். தான் விருதுநகரில் படித்த சாஸ்திரிய வித்யசாலா பள்ளி நண்பர்கள் நால்வருடன் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளார். அந்த நிறுவனத்திற்கு ‘Urban Boyz’ என்று பெயர் வைத்துள்ளனர்.

வரதராஜன், கிருஷ்ணகுமார் மற்றும் முருகன் ஞானவேல் ஆகியோருடன் கைகோர்த்து வசந்தபாலன் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். வசந்தபாலனின் முதல் படமான ஆல்பம் படத்திலிருந்தே வரதராஜன், அவரோடு பயணித்து வருகிறார். முருகன் ஞானவேல் அமெரிக்காவின் ஒரு உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் பணியாற்றி வருகிறார். கிருஷ்ணகுமார் ஒரு முன்னணி தொழிலதிபர்.

தற்போது இவர்கள் தங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை அறிவித்துள்ளனர். இந்தப் படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர் .