×

“எனது மகன்களுக்காக எழுதிய பாடல்”... ‘ரத்தமாரே’ பாடல் குறித்து விக்னேஷ் நெகிழ்ச்சி !

 

‘ரத்தமாரே’ பாடல் எழுதியது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் கூட்டணியில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகியுள்ளது.  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சமீபத்தில் இந்த படத்தின் ஷேகேஸ் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதற்கு முன்னரே அனிரூத் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ரத்தமாரே என்ற ‘லிரிக்கல்’ பாடல் இன்று வெளியிடப்பட்டது.

தந்தை மகன் உறவு குறித்து பேசும் இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக எழுதப்பட்ட எனது முதல் பாடல் எனது குழந்தைகள் உயிர், உலக் ஆகிய இருவருக்காக எழுதப்பட்டது. இதுபோன்ற தருணங்களுக்காக நாம் எப்போதும் வாழ்கிறோம். இதற்காக கடவுளுக்கும், பிரபஞ்சத்திற்கும் நன்றி என்று கூறியுள்ளார்.