மதுபோதையில் விபத்து.. நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் கைது
Apr 19, 2025, 15:08 IST
சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் பாபி சிம்ஹாவின் தந்தையை இறக்கி விட்டுவிட்டு திரும்பும் வழியில் கார் ஓட்டுநர் புஷ்பராஜ் மது அருந்தி உள்ளார்.
பின்னர் அவர் மதுபோதையில் காரை இயக்கியதால் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் நேற்று விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் பெண் உட்பட 3 பேர் காயம் அடைந்தனர். 6 வாகனங்கள் சேதம் அடைந்தன.