கூலி படத்திற்கு 'ஏ' சான்றிதழால் வந்த வினை -என்னாச்சி தெரியுமா ?
ரஜினி நடிப்பில் வெளியான கூலி படத்திற்கு ஏ சர்டிபிகேட் வழங்கப்பட்டதால் சில பாதிப்புகள் அந்த படத்திற்கு நேர்ந்துள்ளது ,அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘கூலி’ திரைப்படம் கடந்த 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் படைத்து சாதனைப் படைத்துள்ளது. இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் படைத்து சாதனைப் படைத்துள்ளது. இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
‘கூலி’ படத்தை விட அதிக வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருந்த கேஜிஎப், பீஸ்ட் படங்களுக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் கூலி திரைப்படத்தை ‘யு/ஏ’ சான்றிதழுடன் தியேட்டர்களில் திரையிட அனுமதிக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது
இதற்கிடையில், சிங்கப்பூரில் கூலி படத்தை மறுதணிக்கை செய்யப்பட்டு அதிலிருந்து 4 நிமிட காட்சியை படக்குழுவின் ஒப்புதலுடன் நீக்கியுள்ளனர்.அதன்படி, பெற்றோர் அனுமதியுடன் அனைவரும் படம் பார்க்கும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதாவது,No children under 16 (NC-16) என்பதிலிருந்து PG-13 (Parents strongly cautioned) என மாற்றப்பட்டுள்ளது.இது போல் உலகம் முழுவதும் அனுமதி வழங்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.