மறைந்த பாடகி பவதாரிணியின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

பாடகி பவதாரிணியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
திரைத்துறையில் இசைஞானி என்று பலராலும் கொண்டாடப்படுபவர் இளையராஜா. இவருடைய மகள் பவதாரிணி சினிமாவில் இசையமைப்பாளராகவும் பாடகியாகவும் வலம் வந்தார். அந்த வகையில் புல்லாங்குழலை விட தனது மென்மையான குரலினால் பல பாடல்களை பாடி ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தார். ஆனால் அவர் கடந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி தன்னுடைய 47 வது வயதில் புற்றுநோயால் காலமானார். இந்த தகவல் இளையராஜாவின் குடும்பத்தினரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.