×

க்ரைம் த்ரில்லரில் உருவாகும் கௌதம் கார்த்தி படம்.. படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட் !

 

க்ரைம் த்ரில்லரில் உருவாகும் கௌதம் கார்திக்கின் புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘பத்து தல’ படத்திற்கு பிறகு கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘கிரிமினல்’. இந்த படத்தில் முதல்முறையாக கௌதம் கார்த்திக்குடன் இணைந்து சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தட்சிணாமூர்த்தி ராமர் என்பவர் இயக்குகிறார். 

பாரா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்டர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். மதுரையைப் பின்னணியாக கொண்டு நடக்கும் க்ரைம் த்ரில்லர் கதையாக இப்படம் உருவாகிறது. இந்த படத்தில் சரத்குமார் போலீஸ் அதிகாரியாகவும், கௌதம் கார்த்தி குற்றவாளியாகவும் நடிக்கின்றனர். \

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மதுரையில் தொடங்கியுள்ளது. மொத்த படத்தையும் 40 நாட்களில் ஒரே கட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்தியை பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.