×

“மாணவர்கள் போராட்டத்திற்கு உறுதுணையாக நிற்கிறேன்” -  ஜீ.வி.பிரகாஷ்  

 

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரைக் கடந்த 25ஆம் தேதி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை எதிர்த்து எதிர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.