×

தடுப்பூசி போடும் போது கதறிய பிரபல நடிகை!

நடிகை நிக்கில் கல்ராணி கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளும் போது அலறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா பாதிப்போரின் எண்ணிக்கை கணக்கில்லாமல் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் உதவியாக இருக்கும் ஒரு முயற்சி. ஆனால் மக்கள் மத்தியில் தடுப்பூசி பற்றிய பயம் இன்னும் உள்ளது. எனவே அரசுடன் இணைந்து திரைத்துறை பிரபலங்களும் மக்களுக்கு தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது நடிகை நிக்கி கல்ராணி தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதுடன் மக்களுக்கு தடுப்பூசி
 

நடிகை நிக்கில் கல்ராணி கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளும் போது அலறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா பாதிப்போரின் எண்ணிக்கை கணக்கில்லாமல் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் உதவியாக இருக்கும் ஒரு முயற்சி. ஆனால் மக்கள் மத்தியில் தடுப்பூசி பற்றிய பயம் இன்னும் உள்ளது. எனவே அரசுடன் இணைந்து திரைத்துறை பிரபலங்களும் மக்களுக்கு தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

தற்போது நடிகை நிக்கி கல்ராணி தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதுடன் மக்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “என்னுடைய முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். எனக்கு ஊசி என்றாலே மிகவும் பயம். ஆனால் சரியானதைச் செய்வது எனக்கு மிகவும் நன்மையாக அமையும். ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க நேரம் எடுக்கும் என்று எனக்குத் தெரியும், ஆனால் தயவுசெய்து விண்ணப்பித்து தடுப்பூசி போடும் வாய்ப்பு வரை முயற்சி செய்து கட்டாயம் போட்டுக்கொள்ளுங்கள்.

நீங்கள் www.cowin.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது #ArogyaSethu ஆப் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். என்னுடைய தடுப்பூசி கிடைப்பதற்கு எனக்கு உதவிய சென்னை கார்ப்பரேஷனுக்கு நன்றி. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், வீட்டிலேயே இருங்கள் & நம்பிக்கையை நிலைநிறுத்துவோம். உலகம் குணமாகும், இதுவும் கடந்து போகும்!” என்று தெரிவித்துள்ளார்.