பிரதமர் மோடியை சந்தித்த இசைஞானி இளையராஜா...!
Mar 18, 2025, 15:33 IST

இசைஞானி இளையராஜா பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
இசைஞானி இளையராஜா 35 நாட்களில் எழுதி முடித்த முழு சிம்பொனியை ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் கடந்த 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் அரங்கேற்றினார். இதன் மூலம் ஆசிய கண்டத்தில் சிம்பொனியை எழுதி, சர்வதேச அளவில் அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் எனும் வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.