×

“குழந்தைகள் படத்தை பார்க்க வேண்டாம்”- வேண்டுகோள் விடுத்த ‘ஜெயம்ரவி’.

 

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘இறைவன்’. இந்த படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

வாமனன்என்னென்றும் புன்னகைமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் ‘இறைவன்’ படத்தை இயக்கியுள்ளார்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்படத்தில்     நயன்தாராவுடன்  இணைந்து  நரேன்விஜயலட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில்   நடித்துள்ளனர்தனி ஒருவன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஜெயம்ரவி - நயன்தாரா ஜோடி நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.  

தொடர்ந்து படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் என அனைத்தும் வெளியான நிலையில் நேற்று படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்  சேதுபதி கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய ஜெயம்ரவி படம் ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் குழந்தைகள் பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து எனது அடுத்த படம் குழந்தைகளுடன் சென்று பார்க்கும் விதத்தில் அமையும் என கூறியுள்ளார். இந்த படத்தில் சைக்கோ கொலையாளியயை பிடிக்கும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் ஜெயம்ரவி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.