×

கேங்ஸ்டராக களமிறங்கும் ‘ஜெயம் ரவி’ விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

வடசென்னையை கலக்கும் கேங்ஸ்டராக புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருப்பவர் ஜெயம் ரவி.கடைசியாக அவர் நடிப்பில் வெளியான படம் பூமி. ஜெயம் ரவியின் 25வது படமாக வெளி வந்த இந்த படத்தை லஷ்மண் இயக்கியிருந்தார். விவசாயத்தைப் பற்றி பேசிய இப்படம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதையடுத்து மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார். இதன் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் பிலிம் சிட்டியில் வேகமாக நடைபெற்று
 

வடசென்னையை கலக்கும் கேங்ஸ்டராக புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார்.

தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருப்பவர் ஜெயம் ரவி.கடைசியாக அவர் நடிப்பில் வெளியான படம் பூமி. ஜெயம் ரவியின் 25வது படமாக வெளி வந்த இந்த படத்தை லஷ்மண் இயக்கியிருந்தார். விவசாயத்தைப் பற்றி பேசிய இப்படம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இதையடுத்து மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார். இதன் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் பிலிம் சிட்டியில் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தை முடித்துவிட்டு ஜெயம்ரவி அடுத்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஜெயம் ரவி நடித்து வெளியான படம் பூலோகம். திரிஷா ஹீரோயினாக நடித்த இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்தப் படத்தை கல்யாண கிருஷ்ணன் இயக்கியிரந்தார். இவர் மீண்டும் ஜெயம்ரவியை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். வடசென்னையை கலக்கிய கேங்ஸ்டர் ஒருவரின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி.இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.